மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அரசின் புதிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், சில கட்டுப்பாடுகளை பின்பற்றவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் அதிக அளவிலான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனால், சென்னையில் தீவிர கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களுக்கு வரும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 10 பேருக்கு மேல் கூடும் இடங்களிலும் கட்டாயமாக மாஸ்க் அணிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணிகள் மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்பதை பேருந்து நடத்துனர் கண்காணிக்க வேண்டும் எனவும், பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை தடாலடியாக குறைவு – இன்றைய நிலவரம்!
இந்நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளும் இன்று முதல் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் மட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருபவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு கட்டாயமாக மாஸ்க் அணியும்படியும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மக்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.