LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு – டெபாசிட் தொகை உயர்வு! மக்கள் அதிருப்தி!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு - டெபாசிட் தொகை உயர்வு! மக்கள் அதிருப்தி!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு - டெபாசிட் தொகை உயர்வு! மக்கள் அதிருப்தி!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு – டெபாசிட் தொகை உயர்வு! மக்கள் அதிருப்தி!

வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது டெபாசிட் தொகையையும் உயர்த்தவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

LPG கேஸ் சிலிண்டர்:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை முறையாக திருத்தப்பட்டு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் 1ஆம் தேதி வந்துவிட்டாலே பொதுமக்கள் பலரும் சிலிண்டர்களின் விலை எவ்வளவு உயர போகிறதோ என பதட்டத்துடன் இருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையையும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கி கொண்டிருப்பவர்களுக்கு அதே டெபாசிட் தொகை தான் வசூலிக்கப்படும் எனவும், புதிதாக கேஸ் இணைப்புகளை வாங்குபவர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகையை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைக்கு சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் 1450 ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்தி வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ இல்லாமலும் சேர்க்கை, அரசு அதிரடி!

இந்நிலையில் புதிதாக கேஸ் இணைப்புகளை பெற இருக்கும் பொதுமக்கள் டெபாசிட் தொகையாக ரூபாய் 2500 கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் வாங்குபவர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகையாக ரூபாய் 2500 கட்ட வேண்டும். இதே நேரத்தில் இரண்டு கேஸ் இணைப்புகளை பெறுபவர்கள் டெபாசிட் தொகையாக 4,600 கட்ட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சிலிண்டருக்கான டெபாசிட் தொகையை திடீரென உயர்த்திவிட்டதால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் மீண்டும் கட்டண உயர்வு குறித்த செய்தியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலிண்டர் விலை உயர்வது மட்டுமல்லாமல் டெபாசிட் தொகையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!