உக்ரைனில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு எழுத அனுமதி!
உலக நாடுகள் கொரோனா ஊரடங்கில் இருந்து மீண்டு வரும் இந்த நேரத்தில் ரஷ்யா உக்ரைனை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் போர் நடத்தி வருகிறது. அதனால் அங்கே பயின்று வரும் இந்திய மருத்துவ மாணவர்கள் நிலைமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரஷ்யா – உக்ரைன் போர்:
கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து விலகி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் உக்ரைனை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. அதனால் வல்லரசு நாடுகள் உட்பட நேட்டோ பிரிவில் இருக்கும் அனைத்து நாடுகளும் ரஷ்யா மீது அதிகப்படியான வர்த்தகத் தடைகளை விதித்தது. அதனால் உலகளவில் அதிகமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் எரிசக்தி பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேவை அறிமுகம்!
இந்நிலையில் சுமார் 71 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் போர் காரணமாக இந்தியாவில் இருந்து , 18 ஆயிரம் மாணவர்கள் அங்கே மருத்துவ படிப்பிற்காக சென்றவர்கள் தற்போது தாயகம் திரும்பி இருக்கின்றனர். மாணவர்களில் பஞ்சாப், டில்லி, ஹரியானா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவ படிப்பு படிக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
அவர்களின் படிப்பு கேள்வி குறியாக இருந்த நிலையில் மார்ச் 21ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 30 அல்லது அதற்கு முன் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்ற இந்திய மாணவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.