இந்திய ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 130 ரயில்கள் ரத்து!
இந்தியாவில் தற்போது வழக்கம் போல அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகளால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 130க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலும் பயணம் செய்வதையே தவிர்த்து வந்தனர். இதனால் ரயில்வேத்துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பயணிகளின் வருகை குறைந்த காரணத்தால் முக்கிய வழித்தட ரயில்கள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. நமது நாட்டில் பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.
அதனால் மீண்டும் வழக்கம் போல அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து பயணிகள் வசதிக்காக தற்போது கொரோனா கால கட்டத்திற்கு முன்பு இருந்தது போல அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கனமழை, ரயில் பராமரிப்பு பணிகள் போன்றவற்றின் காரணமாக நாடு முழுவதும் சுமார் 216 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய ஓய்வூதிய கால்குலேட்டரை பயன்படுத்தும் முறை!
இதில் 179 ரயில்கள் முழுவதுமாகவும் மீதமுள்ளதை 37 ரயில்கள் பகுதி நேரமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று (ஆகஸ்ட் 18) 130 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 106 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 27 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் ரயில்வே வாரியத்தின் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்