இந்திய ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – 129 ரயில்கள் ரத்து!
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 129 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரயில்கள் ரத்து:
இந்தியாவில் அரசுப் பேருந்து கட்டணங்களை விடவும் ரயில் கட்டணங்கள் குறைவு என்பதால் நெடுந்தொலைவு செல்ல விரும்பும் நடுத்தர, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். கட்டணமும், நேரமும் குறைவு என்பதால் ரயில் பயணம் மக்களுக்கு சௌகரியமாக உள்ளது. இந்த நிலையில் ரயில்வேத்துறை கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரியத் தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியதால் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் முன்பதிவில்லா ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வேத்துறை புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. அதாவது ரயில் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் எண் பதிவுசெய்யப்பட்ட குரல் அமைப்பு ஆகும். அதனால் பயணிகள் தங்களது மொழியை தேர்தெடுத்து தங்களது புகாரை தெரிவிக்கலாம். இந்த நிலையில் இன்று (ஜூலை 18) நாடு முழுவதும் உள்ள ரயில்வேயின் மண்டலகங்களில் உள்ள ரயில்களில் பழுது பார்ப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் 129 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக அறக்கட்டளையில் தேர்வு,நேர்காணல் இல்லாமல் வேலை !
ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏராளமான பயணிகள், அஞ்சல் மற்றும் விரைவு ரயில்கள் உள்ளன. ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி தளத்தில் அல்லது ரயில்வே கவுண்டரில் டிக்கெட் வாங்கியிருந்தால், இந்திய ரயில்வே கட்டணத்தை உங்களுக்குத் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளோர் இந்த பட்டியலை பார்த்து அறியலாம்.