தமிழக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிளஸ் 2 மதிப்பெண் தயாரிப்பு பணி!
தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி பெற்றுள்ளதால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்க அவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் 2 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2020-21 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு ரத்து செய்த மாநிலங்களில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல் துறை உத்தரவு!
மேலும் அடுத்த 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கீடு செய்வது குறித்து தெரிவிக்க ஆணையிட்டுள்ளது. இதனால் தமிழக தேர்வுத்துறை இயக்குனர் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவைப்படுகிறது. எனவே அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எவ்வாறு கணக்கீடு செய்வது என்பது குறித்து அறிவித்த பின்னர் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கணக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பாடு 10,11,12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது.