அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை!

0
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை!

தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வாழ்நாள் சான்றினை பெற்று சமர்ப்பிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தபால் துறையுடன் செய்யப்பட்டுள்ளது.

வாழ்நாள் சான்றிதழ்:

இந்தியாவில் பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் வகையில் மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் பேருதவி புரிகிறது. வேலையை விட்டு நின்ற பின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அரசு வழங்கும் பென்ஷன் தொகை மூலம் வாழ்க்கையை நடத்தலாம். பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும். கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றால் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்திற்கு சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

ஒரு வேளை ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதனால் இவர்களுக்கு உதவும் வகையில் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி’ மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு விவரம் போன்றவைகளை சமர்ப்பித்து கைரேகையை பதிவு செய்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதார்கள் சமர்ப்பிக்க முடியும். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வாழ்நாள் சான்றிதழை பெற்று சமா்ப்பிக்க அரசு தபால் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 7.15 லட்சமாக உள்ளது. இவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை அளிக்கப்பட உள்ளது. தபால் துறை மூலம் இந்தச் சேவை செய்யப்பட்டது. இந்த சேவைக்கு ரூ.70 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறப்பட்டு இணையம் வழியாகவே சமர்ப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!