தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு எழுதும் போது கண்டிப்பாக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தான் எழுத வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அதே போல இரண்டு ஆண்டுகளுமே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கு முன்னால் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்தாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கண்டிப்பாக இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதே போல 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆன்லைன் வழியாக சரியாக பாடம் கற்பிக்காததால் தற்போது வேக வேகமாக பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது.
மே 9ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!
மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. தற்போது மாணவர்கள் செய்முறை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலும் அதிகரித்து வரும் காரணத்தினால் தேர்வு கண்டிப்பாக நடக்குமா என்கிற கேள்வி வந்தது. ஆனால், கொரோனா பரவல் எவ்வளவு அதிகரித்தாலும் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், தேர்வெழுதும் போது மாணவர்கள் மாஸ்க் அணிந்தபடியே தான் தேர்வெழுத வேண்டும் எனவும் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.