வங்கிகளில் FD கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ரிசர்வ் வங்கி வெளியீடு!
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள FD எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை கணக்கை புதுப்பிக்க தவறினால் குறைந்தபட்ச வட்டி மட்டுமே வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த கிளைகளில் பல வாடிக்கையாளர்கள் எப்டி (FD) எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை கணக்கு வைத்துள்ளனர். மேலும் இந்த வைப்புத் தொகை 15 நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை வைக்கப்படுகிறது. ஆண்டுகளின் அடிப்படையில் திட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப வட்டி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ரூ.5க்கு டேட்டா திட்டங்கள்!
அந்த வட்டியானது வங்கிகளுக்கு இடையே வேறுபடுகிறது. தற்போது நிரந்தர வைப்புத் தொகைக்கு சராசரியாக 5 சதவிகித வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் சேமிப்பு கணக்குகளுக்கு 2.9 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் வழக்கமாக வைப்புத்தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாக வங்கிகளில் புதுப்பிக்கப்படும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாற்றம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி நிரந்தர வைப்புத்தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதனுடைய கால அவகாசம் முடியும் நிலையில் வங்கிகளுக்கு நேரடியாக சென்று புதுப்பிக்க வேண்டும். இதற்கு தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே வட்டி வழங்கப்படும். இல்லையென்றால் வைப்பு தொகைக்கு வட்டி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.9 சதவிகித வட்டி மட்டுமே வழங்கப்படும்.