தமிழகத்தில் மின் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மின்சார வாரியம் தகவல்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்விபத்துகளை தவிர்க்க மின்சார ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று மின்வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
மின்சார விபத்துகளை தடுக்க:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என திமுக அரசு வாக்குறுதி அளித்ததை அடுத்து, பல இடங்களில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பழுது ஏற்பட்டாலும் பொது மக்கள் உடனே தெரிவிக்க இலவச புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனே ஆட்களை அனுப்பி வைக்கப்பட்டு பழுது சரி செய்யப்படும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மின்சார பழுதுகளை சரி செய்யும் போது தேவையான பாதுகாப்பு உடைகள் அணியாமல் செல்வதால் பலருக்கு விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர். சில மாதங்களாக புதிதாக நியமிக்கப்பட்ட கேங்மேன் பணியாளர்கள், களப் பணியாளர்கள் மின் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படாததும் விபத்து அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – பதற்றத்தில் மக்கள்! போராட்ட எதிரொலி!
மேலும் மின்சார சீரமைப்பு பணியின்போது ஊழியர்கள் ஷு, ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அதனால் தான் மின்சார விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பின் படி மின் ஊழியர்கள் ஷு, ஹெல்மெட் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கையுடன் பழுதடைந்த கம்பிகள், வயர்கள், ட்ரான்ஸ்பார்மர்கள், கம்பங்கள் உடனடியாக மாற்றிட வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.