மின் பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மின் வாரியம் அதிரடி!!
மின் கணக்கிட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முதல் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகளில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று மின்வாரிய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் மின் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மின் கட்டணம்:
தமிழகத்தில் மின் வாரிய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக கணக்கீடு செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டம் செலுத்தும் முறை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததில் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மின் பயனர்களால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனால் அரசு மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 சலுகைகளையும் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசத்தையும் அளித்தது.
Vijay TV Bigg Boss 5 Promo | ராஜு & ப்ரியங்காவுக்கு இடையே தடித்த வாக்குவாதம் – அடுத்த கலவரம்?
மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த விடும் இல்லையெனில் அபராதத்துடன் சேர்த்து மின் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கடந்த மாதங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்ட மாதங்களில் மட்டும் மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மின் வாரியத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய மின் கணக்கிட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முதல் கட்டணம் செலுத்தாமல் உள்ள மின் பயனர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்த 87 மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மின் இணைப்புகளில் மின் வினியோகம் செயல்பாட்டில் தான் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு நடப்பு ஆண்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஆய்வு செய்ய மின் இணைப்பு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.