மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 4% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக 4% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) தரவுகளின் புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 4% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 4% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக இருக்கும். ஆனால், தற்போது வரைக்கும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்த்துவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதாவது, நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் மட்டுமே அதனை சமாளிக்க அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
AICPI-IW தரவுகளின் படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) விகிதங்கள் திருத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைப்பதற்கான 8வது ஊதியக் குழு திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
Very good message
Good information