CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு முறை ஏற்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு மதிப்பீடு முறையை உச்சநீதிமன்றம் சரியானதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
CBSE கல்வி வாரியம்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்த அளவீடுகளை 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
மதுரை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 23 மின்தடை!
மாணவர்களின் 12ம் வகுப்பு இடைப்பருவ தேர்வுகளில் எடுத்துள்ள மதிப்பெண்கள் 40% அளவிற்கும், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும் மீதம் உள்ள மதிப்பெண்கள் செய்முறை தேர்விலிருந்தும் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீடு முறை குறித்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.
அப்போது, 10, 11, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிபிஎஸ்இ மதிப்பிடும் முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், தகுந்த ஆலோசனைக்கு பின்பே சிபிஎஸ்இ வாரியம் தேர்வை ரத்து செய்தது. அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், மத்திய அரசு தனது தரப்பு வாதத்தில் மாணவர்களின் உயர் விலை மதிப்பற்றது, அதனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்களை தேர்வு எழுத நிர்பந்திக்க முடியாது. மாணவர்களுக்கு தேர்வு சமயத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், அது பெறும் சிக்கலை உண்டாகி விடும். சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு தான் என்று தெரிவித்துள்ளது.