CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று (செப்.17) முதல் விண்ணப்பிக்கலாம்!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு எழுதிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனியார் மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு இணையதளம் மூலம் இன்று (செப். 17) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு விண்ணப்பங்கள்:
கடந்த 2 ஆண்டுகளாக பல மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில் சென்ற கல்வியாண்டில் பல மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அது மட்டுமில்லாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக நடத்தியதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவ மாணவிகள் தற்போது உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் தனியார் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இந்த தேர்வினை எழுத மாணவர்கள் இன்று (செப். 17) முதல் அதிகாரபூர்வ இணையதளமான cbse.gov.in ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப செப். 30 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராததுடன் கூடிய விண்ணப்பங்களை அனுப்ப அக். 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- முதலில் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in க்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில், அவர்கள் கல்வி இணையதளத்திற்குச் சென்று தொடர்புடைய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்
- அதில் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.
JIO யூசர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!
- அதன் பின் விண்ணப்பதாரர்கள் வழிமுறைகளைப் படித்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
- அதன் பின் விண்ணப்பதாரர்கள் மற்றொரு பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் தேர்வுப் படிவ இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களை நிரப்ப வேண்டும்
- படிவத்தை சமர்ப்பிக்கும் முன் அவர்கள் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் எதிர்கால குறிப்புக்காக அதன் நகலை வைத்திருக்க வேண்டும்.
- காலக்கெடுவிற்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
- தேர்வு நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
Apply For Online Application for Private Candidate for Examination 2023
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்