CBSE 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் பாடங்கள்!
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடங்கள் கற்பிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ புதிய பாடங்கள்:
நாடு முழுவதும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் முறையே மத்திய அரசின் கல்வி வாரியத்திடம் அனுமதி பெற்று அதன் பாடத்திட்டங்களை பின்பற்றி கல்வி கற்பிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.
இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்!!
இந்த தொற்று பரவலால் சிபிஎஸ்இ பொத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன. மதிப்பீடு முறை மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரவல் குறைந்த பிறகு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 6 முதல் 8 வகுப்பு வரை “கோடிங்” பாடப்பிரிவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை “டேட்டா சயின்ஸ்” பாடப்பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் மாணவர்கள் பள்ளியிலேயே கற்கும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடங்களை கற்பிக்க மத்திய கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு முதல் இந்த புதிய பாடங்கள் சேர்க்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.