தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
போதை விழிப்புணர்வு
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நுழையாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக அரசு இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்படி தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்தில் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து இந்த ஆலோசனையின் முடிவில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் (ஆகஸ்ட் 12) நாளை முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கு மாணவர்கள் அனைவரும் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TN TRB தேர்வு தேதியில் மாற்றம்? தேர்வர்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!
இதனை நாளை முதல் 19ம் தேதி வரை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படத்தை அனைத்து மாணவர்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.