அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவான நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கடந்த ஒரு சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் புதிய பாதிப்புகள் 2 ஆயிரத்தை தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் கணிசமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) ஜார்க்கண்ட் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
ஏற்கனவே தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளியைத் தொடர்ந்து, பள்ளிகள் மீண்டும் ஆப்லைன் வகுப்புகளுக்கு திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அறிக்கைகள் கவலையை தூண்டியுள்ளன. இந்த தொற்றுநோய்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் தகுந்த கொரோனா வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஜார்க்கண்ட் அரசாங்கம் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வி ஊக்கத்தொகை திட்டம்!
இப்போது ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை செயலாளர் ராஜேஷ் சர்மா, பள்ளிகளில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ‘பல மாநிலங்களில் கொரோனா வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த நிலைமைக்கு ஏற்றபடி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நேரத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படும் SOPகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சட்டசபை கூட்டங்கள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, பள்ளி ஆசிரியர்கள், மெஸ் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளிடம் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தனியார் பள்ளிகள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளன.