ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்து புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் ஆதார் செல்லுபடியாகும். இந்த நிலையில் ஆதார் ஆணையம் ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆதார்:
இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போதைய சூழலில் ஆதார் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு , வங்கி பணப் பரிவர்த்தனை செய்ய , சிம் கார்டு வாங்க கேஸ் இணைப்பு பெற அதுமட்டுமில்லை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூட ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் ‘இந்த’ முறையில் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!
இவ்வாறு அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் ஆதார் கார்டில் நாம் எப்போதும் விவரங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். அதாவது உள்ள பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை முறையாக வைக்க வேண்டும். தற்போது ஒரே மாதிரியான போலி ஆதார் கார்டுகள் வந்து விட்டது. இதனை வைத்து பல வித மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதானல் ஆதார் அட்டை தாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் உங்களின் ஆதார் கார்டை பாதுகாக்க ’மாஸ்க் ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்வது நல்லது.
Exams Daily Mobile App Download
அது என்னவெனில் இந்த ’மாஸ்க் ஆதார் கார்டில் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் உங்களின் ஆதார் எண்ணை வேறு யாரும் பார்க்க முடியாது. uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Download Aadhaar’ என்பதை கிளிக் செய்து உங்களின் ஆதார் எண், பெயர் மற்றும் பிற விவரங்களை உள்ளீட்டு ஆதார் வகைகளில் Masked Aadhaar என்பதைத் தேர்வு செய்யவும். உங்களது மாஸ்க் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்