ஐயப்பன் கோவில் பிரசாதம் குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு தகவல்!
ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரசாதம் தயாரிப்பது குறித்தான அறிவிப்பு ஒன்றை கேரளா அரசு வெளியிட்டுள்ளது.
கோவில் பிரசாதம்:
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஏதேனும் சிறப்பு பூஜையன்று மட்டுமே நடை திறக்கப்படுகிறது. அதாவது, கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜை, ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை என ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜையன்று நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து நேத்திக்கடன் செய்ய வருவதுண்டு.
Exams Daily Mobile App Download
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமாக உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் ஆகிய பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பிரசாதத்தை மலையாள பிராமிணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து அரசின் இந்த அறிவிப்பு சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என கலாச்சார பேரவை தலைவர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பதி தரிசனம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!
இதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மலையாள பிராமணர்கள் மட்டும் தான் பிரசாதத்தை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. இந்நிலையில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் ஆகிய பிரசாதங்களை பிராமணர் அல்லாதவர்களும் செய்யலாம் என கேரளா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளதால் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.