தமிழக பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வி ஆணையர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளிக்கல்வி 2022-2023 ஆம் ஆண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் “விழிப்புணர்வு வாரம் , மாணவர்களின் உடல் / மன நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்” குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2022 முற்பகல் 10.30 மணிக்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, 11.08.2022( நாளை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு உறுதிமொழி எடுக்க அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அந்நிகழ்விற்குப் பின் நேரலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்குக் காட்டவும் , உறுதிமொழி எடுத்த விவரத்தினை, பள்ளி வகை வாரியாக நிரப்பி இவ்வாணையரக இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிற்பகல் 12.30 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியான அறிக்கையினை அனுப்பி வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை, கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ‘Yellow’ அலர்ட் – வானிலை அறிவிப்பு!
உறுதிமொழிகள்:
- போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
- நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், எனது நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகளை வழங்குவேன்.
- போதை பழக்கத்திற்கானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
- போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு பயன்பாடு, ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணையாக நிற்பேன்.
- மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.