தமிழக அரசு பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மாணவர்களை ‘இதில்’ ஈடுபடுத்த கூடாது!
தமிழகத்தில் பல பள்ளிகளில் மாணவர்களை வைத்தே தூய்மை பணி போன்ற அனைத்து பணிகளையும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மாணவர்களை வைத்து இது போன்ற பணிகளை செய்ய கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது, ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை தாண்டியும் கூடுதலாக திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பள்ளிகல்வித்துறை உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை வைத்தே பள்ளிக்கு வேலையடிப்பது, பள்ளியில் அதிகளவில் வளர்ந்துள்ள புற்களை அகற்றுவது போன்ற வேலைகளை செய்ய சொல்கின்றனர்.
மேலும், மாணவனுக்கு தண்டனை என்றாலும் கூட பள்ளிகளில் உள்ள வேலைகளை பள்ளி நிர்வாகம் மாணவர்களை செய்ய சொல்கிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விளையாட்டு வேளையில் விளையாட்டு அரங்கத்தில் முளைத்திருக்கும் புற்களை அகற்றுவது, விளையாட்டு அரங்கத்தை செம்மைப்படுத்துவது மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துவது போன்ற வேலைகளை செய்ய சொல்கின்றனர். இதனால், சில மாணவர்களின் பெற்றோர்களும் புகாரளித்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் – இணையத்தில் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இதனிடையே, பள்ளிகளில் உள்ள வேலைகளை மாணவர்களை வைத்து செய்ய கூடாது எனவும், எக்காரணம் கொண்டும் தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள தூய்மைப்பணிகளை 100 நாள் வேலைத்திட்ட வேலையாட்களை கொண்டு செய்ய சொல்லலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
அருமை அடுத்து என்ன?