தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் - தகவல் வெளியீடு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் - தகவல் வெளியீடு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – தகவல் வெளியீடு!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் செயல்படாது என்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேஜ் அணிவார்கள் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது. இதனை தற்போது வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தனியார் பள்ளிகள்

தமிழகத்தில், கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பள்ளியை தாக்கினர். மேலும் பள்ளியின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் இங்கு பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழக மாணவர்களுக்கு ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை – முக்கிய அறிவிப்பு!

இதனால் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்தனர். அதன்படி இன்று பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தனியார் பள்ளி சங்கங்கள் தெரிவித்துள்ளதாவது, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளன. அதன்படி நாளை முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயல்பு நிலையில் செயல்படும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!