தமிழகத்தில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ளதால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக மின்சார உற்பத்தியில் தடை ஏற்பட்டு மின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நேர மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மின்தடை என்று தவறான செய்தியை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு
இந்தியாவில் மின்சார உற்பத்தி செய்யப்படும் போது 70 சதவீதம் நிலக்கரி தேவைப்படுகிறது. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மின் நுகர்வின் அளவும் உயர்ந்துள்ளது. அதனால் மின்சார தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய மின் உலைகளில் உள்ள நிலக்கரி இருப்பு இந்த மாத தொடக்கத்திலேயே ஏறக்குறைய 17% சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தேவைப்படும் நிலக்கரியில் 3ல் ஒரு பங்கு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பல மணி நேர மின்தடை ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநிலத்தில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்படுகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழகத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளில் விடுமுறை – அதீத வெப்ப நிலையின் எதிரொலி!
மேலும் இது தொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். அத்துடன் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் கூடுதலாக 500 மெகாவாட் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களில் மின்தடை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் 1.19 நாளுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மின் தேவை 17,543 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மின் விநியோகம் தடங்களின்றி விநியோகிக்கப்பட்டது.