மத்திய அரசு பணியாளர்களுக்கு DA & DR உயர்வு எப்போது? முக்கிய தகவல் வெளியீடு!
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
DA & DR உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை பொறுத்து தான் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடந்த மே 2022 ல் பணவீக்கம் மிகவும் உயர்ந்துவிட்டது. இதன் பின்னர், ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 15.18% ஆக குறைந்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மொத்த விலை குறியீடு (WPI) எண்னை பொறுத்து தான் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் DR நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மொத்த விலைக் குறியீடு அதிகரிப்பதனால் அகவிலைப்படி மற்றும் DR அதிகரிக்குமா என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். அதாவது, DA மற்றும் DR ஐ அதிகரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) தரவுகளின் படி, DA மற்றும் DR பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
மேலும், கடந்த மே மாதத்தில் AICPI-IW 1.3 புள்ளிகள் வரைக்கும் அதிகரித்து 129 புள்ளிகளாக ஆக இருந்தது. இதற்கு பிறகு ஜூன் மாதத்தில் AICPI-IW 0.2 புள்ளிகள் அதிகரித்து 129.2 ஆக இருந்தது. ஜூலை மாதத்திலும் AICPI-IW குறியீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரைக்கும் அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.