அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான முக்கிய தகவல் – நிதியமைச்சு வெளியீடு!
இலங்கையில் பொருளாதார பேரழிவுக்கு பொறுப்பேற்று ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்தன. தற்போது இது தொடர்பாக நிதியமைச்சு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போராட்டம் கடந்த 3 வாரமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக காலிமுகத்திடலில் 2 வாரங்களாக தொடர்ந்து இரவும் பகலுமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களின் அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இன்று 1000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் பதவி விலகவில்லையென்றால் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக தற்போது நிதியமைச்சு முக்கிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவல்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
தமிழக அஞ்சல் துறையில் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2022 – மே 17 கடைசி நாள்!
அத்துடன் நிதியமைச்சு கூறியதாவது, அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பாக எந்தவித தீர்மானமும் இயற்றப்படவில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அரசு நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் செலவினங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.