தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா அச்சம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வந்தது. கொரோனா தொற்று ஆதிக்கம் தொடர்ந்து செலுத்தி வந்ததால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்து மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
காரணம் கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி பாஸ் என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால் உயர் கல்வியில் எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கேள்விகள் எழும்பி வருகிறது. இதனை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்தார்.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) புதிய செயலர் – உமா மஹேஸ்வரி நியமனம்!
இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளத்தை தற்போது அமைச்சர் பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் பின் பேசிய அமைச்சர் கூறியதாவது, சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டய படிப்புக்கு வருகிற 12ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார். அதேபோல் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளன என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.