உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான முக்கிய தகவல் – மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

0
உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான முக்கிய தகவல் - மருத்துவ ஆணையம் அறிவிப்பு!
உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான முக்கிய தகவல் - மருத்துவ ஆணையம் அறிவிப்பு!
உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான முக்கிய தகவல் – மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

உக்ரைனில் படித்து வந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

மருத்துவ படிப்பு:

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சில மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் இதற்காக பல கட்ட எதிர்ப்புகள் வந்த போதிலும் அரசு இந்த தேர்வினை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வினால் நிறைவேறாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக ஒரு சில மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் படிக்க செல்கின்றனர். அதாவது, வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் கட்டணங்களை விட குறைவாக வசூலிக்கப்படுவதால் அதிகளவில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயில செல்கின்றனர். அந்த வகையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உக்ரைன்-ரஷ்யா போரால் அங்கு பயின்ற இந்திய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. மேலும் அவர்கள் அனைவரும் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களும்,பெற்றோர்களும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

TNPSC Group 2 & 2A தேர்வு வெளியீட்டில் தாமதம் இதற்காக தான்? முழு விளக்கம்!

இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, உக்ரைனில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள், வேறு நாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடரலாம் என்றும், மாணவர்கள் நேரடியாக புதிய செமஸ்டரில் இணைந்து படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது படித்து வந்த பல்கலைக்கழகங்களே இதற்கான வசதிகளை செய்து தரும் என்றும், மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை உக்ரைன் பல்கலைக்கழகங்களே வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!