முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 20
பிறப்பு:
- தொ. மு. சிதம்பர ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார்.
படைப்புகள்:
- சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர்.
- பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சியசிந்தனைகளை வளர்த்தது.
- இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.
- இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார்.
- 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார்.
- இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது.
- இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம்.
- அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார்.
விருதுகள்:
- சாகித்திய அகாதமி விருது – 1983
- சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
- பாரதி விருது – 2001
ராஜம் கிருஷ்ணன் பிறந்த தினம்
பிறப்பு:
- ராஜம் கிருஷ்ணன் அக்டோபர் 20, 1925 ல் பிறந்தார். மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார்.
- இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
அரசுடைமை:
- இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.
விருதுகள்:
- 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
- 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
- 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
- 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
- 1991—திரு.வி.க. விருது
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்