முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 11

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 11

பெண் குழந்தைகள் தினம்

  • இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் – 11ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது.
  • அவ்வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகள் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.
  • இதை பல ஆய்வுகள் நமக்கு உணர்த்தி உள்ளன. இளம் வயதில் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் இந்த பெண்கள், குழந்தைப் பேறு சிக்கல், பிரசவ கால மரணம் என பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
  • பாலியல் வன்முறைகளாலும் பெண் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இந்த வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க தனி சட்டம் உள்ளது. ஆனாலும், இந்த கொடுமைகளின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன.
  • இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும், மக்கள் மனதில் முதலில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
  • தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு அடிமனதில் ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமாகும்.
  • பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்கி அவர்களைப் பேணிப் பாதுகாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!