முக்கியமான நிகழ்வுகள் மே-9
கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம்
பிறப்பு:
- மே 9, 1866ல் பிறந்தார்.
சிறப்பு:
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
- கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார்.
- 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் மிதவாதி.கோகலே மகாத்மா காந்தியின் அரசியல் குரு.
- 1899 ல் கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1903 மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1912 ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார்.
இறப்பு:
- பிப்ரவரி 19, 1915ல் இறந்தார்.
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்
- இரண்டாம் உலகப்போர் என்பது செப்டம்பர் 1939-செப்டம்பர் 1945 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர்.
- இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும்.
- எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்