முக்கியமான நிகழ்வுகள் மே-3

0

முக்கியமான நிகழ்வுகள் மே-3

உலக பத்திரிகை சுதந்திர தினம்

  • பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ம் தேதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
  • அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் 

பிறப்பு:

  • மே 3, 1935 ல் பிறந்தார்.

இயற்பெயர்: ரங்கராஜன்.

சிறப்பு:

  • தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.
  • சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.
  • இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
  • இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது.தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார்.

சில புத்தகங்கள்:

  • ஆயிரத்தில் இருவர்
  • ப்ரியா
  • நைலான் கயிறு
  • ஒரு நடுப்பகல் மரணம்
  • மூன்று நிமிஷம் கணேஷ்
  • காயத்ரி

விருதுகள்:

  • தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
  • வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
  • சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • தூர்தர்ஷன் சிறந்த தொடர் “மஹான் ராமானுஜார்” க்கான மைலாப்பூர் அகாடமி விருது.
  • 1999 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட சினிமா கலைமண்டலம் சிறந்த எழுத்தாளர் விருது.
  • சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – பாண்டவர் பூமி (2001)

இறப்பு:

  • பிப்ரவரி27,2008 ல் இறந்தார்.

சாகீர் உசேன் நினைவு தினம் 

பிறப்பு:

  • பிப்ரவரி 8, 1897 ல் பிறந்தார்.

சிறப்பு:

  •  இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார்.
  • 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
  • இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார்.

விருதுகள்:

  • இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது.
  • 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

இறப்பு:

  • 3 மே 1969ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!