முக்கியமான நிகழ்வுகள் மே-3
உலக பத்திரிகை சுதந்திர தினம்
- பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- 1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ம் தேதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
- அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.
எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்
பிறப்பு:
- மே 3, 1935 ல் பிறந்தார்.
இயற்பெயர்: ரங்கராஜன்.
சிறப்பு:
- தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.
- சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.
- இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
- இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது.தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார்.
சில புத்தகங்கள்:
- ஆயிரத்தில் இருவர்
- ப்ரியா
- நைலான் கயிறு
- ஒரு நடுப்பகல் மரணம்
- மூன்று நிமிஷம் கணேஷ்
- காயத்ரி
விருதுகள்:
- தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
- வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
- சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
- தூர்தர்ஷன் சிறந்த தொடர் “மஹான் ராமானுஜார்” க்கான மைலாப்பூர் அகாடமி விருது.
- 1999 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட சினிமா கலைமண்டலம் சிறந்த எழுத்தாளர் விருது.
- சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – பாண்டவர் பூமி (2001)
இறப்பு:
- பிப்ரவரி27,2008 ல் இறந்தார்.
சாகீர் உசேன் நினைவு தினம்
பிறப்பு:
- பிப்ரவரி 8, 1897 ல் பிறந்தார்.
சிறப்பு:
- இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார்.
- 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
- இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார்.
விருதுகள்:
- இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது.
- 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது.
- டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.
இறப்பு:
- 3 மே 1969ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்