முக்கியமான நிகழ்வுகள் மே-23
கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்
பிறப்பு:
- மே 23, 1707ல் பிறந்தார்.
சிறப்பு:
- சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர்.
- இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர்.
- தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
- இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன் பின் தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார்.
வகைப்பாட்டியல்:
உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:
- திணை(இராச்சியம்) (kingdom)
- வகுப்பு (class)
- வரிசை (order)
- பேரினம் (genus)
- இனம் (species)
- இவர் உயிரினங்களை பிளாண்டே (plantae – தாவரங்கள்), அனிமேலியா (animalia – விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார். இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.
முக்கிய நூல்கள்:
- இயற்கையின் அமைப்பு(Systema Naturae)
- உயிரினங்களின் வகைப்பாடு
- இன வகைப்பாடு
- தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு(Philosophia Botanica)
நினைவுச் சின்னங்கள்:
- லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய அஞ்சல் தலைகள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
- உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான சிலைகள் உள்ளன.
- 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் தாவரவியல் அல்லது விலங்கியலில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது.
- வாக்ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் (லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.
இறப்பு:
- ஜனவரி 10, 1778ல் இறந்தார்.
சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
- வளரும் நாடுகளில் சுமார் 2 – 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர்.
- ஆண்டிற்கு ஐம்பதாயிரம்முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
- ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- ஐ.நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
- 2019 Theme: “Leaving no one behind: Let us commit to ending fisula now!”
உலக ஆமைகள் தினம்
- 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர்.
- விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர் 2000ஆம் ஆண்டிலிருந்து ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.
- 1972ம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது.
- மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது.
- ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும்.இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
- சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது.
- இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |