முக்கியமான நிகழ்வுகள் மே-20
உலக அளவியல்(Metrology) தினம்
- நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியலை சார்ந்து உள்ளன.
- முதன் முதலாக 1875ம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.
- இதன் மூலமாக வேகமாக வளர்ந்து வரும் வணிக யுகத்தில் மூலப் பொருட்களை சார்ந்து வெவ்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
- மேலும் இயந்திரங்கள், மருத்துவத்துறை, விண்வெளி மற்றும் அறிவியல் துறை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் சாதனங்களை துல்லியமாக அளவிட ஒளியினைக் கொண்டு அளவிடும் ஒளியியல் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே-20ல் உலக அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
- 2019 Theme: The International System of Units – Fundamentally better.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி பிறந்த தினம்
பிறப்பு:
- மே 20, 1894ல் பிறந்தார்.
இயற்பெயர்:சுவாமிநாதன்
சிறப்பு:
- காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார்.
- பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்படுகிறார்.
இறப்பு:
- ஜனவரி 8, 1994ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்