உலக தொலைத்தொடர்பு தினம்
- உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
- இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
- இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.
- உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
- 2019 Theme: Bridging the standardization gap
உலக உயர் இரத்த அழுத்த தினம்
- உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக மற்றும் அறிவித்திருக்கிறது.
- ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம்.
- இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம்.
- இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2019 Theme: Know Your Numbers
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள்:
- பக்கவாதம்
- பார்வை பறிபோகுதல்
- சிறுநீரக செயலிழப்பு
- இதய நோய் மற்றும் மாரடைப்பு
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில வழிகள்:
- உணவில் உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும் .
- பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
- உடற்பயிற்சி
- மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்
- புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
இயக்கம் அமைப்பு உருவான நாள்
- திருமுருகன் காந்தி தமிழ்நாடு தேசத்தை சேர்ந்த தமிழ்த்தேசியவாதி மற்றும் பெரியாரிய சமூக சீர்த்திருத்தவாதி ஆவார்.
- இவர் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பான மே 17 இயக்கம் என்கிற அமைப்பை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக உருவாக்கினார்.
- திருமுருகன் காந்தி தமிழீழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக் குறித்த மே 17 இயக்கத்தின் கருத்துக்கள், செயற்பாடுகள் குறித்து 2012ம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் நடந்த ஒரு பேரணியில் விளக்கியிருந்தார்.
- இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து அது சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.
- இவர் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா சபையில் பேசியிருக்கிறார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்