முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -18
நெல்சன் மண்டேலா பிறந்த தினம்
- நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela), 18 ஜூலை 1918 அன்று பிறந்தார்.
- தென்னாப்பிரிக்காவின்மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
- தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.
- இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார்.
- 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
உலக கேட்கும் நாள்
- உலக கேட்கும் நாள் 2010 ஆம் ஆண்டிலிருந்து உலக கேட்கும் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட உலகளாவிய நிகழ்வாகும். பிரபல கனட நாட்டு இசையமைப்பாளர், இசைக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆர். முர்ரே ஷாஃபர் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜூலை 18 உலகக் கேட்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் அவரது உலக சவுண்ட்ஸ்கேப் திட்டம் 1970 களில் ஒலி சூழலியல் பற்றிய அடிப்படை யோசனைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கியது. எனவே, உலகக் கேட்பதற்கான நாள் நமது உலகத்தைப் புரிந்துகொள்வதில் ஷாஃபர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்க அனுசரிக்கப்படுகிறது.
விருதுகள்:
- அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
இறப்பு: 5 திசம்பர் 2013.