முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 15
கலீலியோ கலிலி பிறந்த நாள்
- இத்தாலி பைஸா நகரத்தில் 1564 ஆம் ஆண்டில் பிறந்தார் கலீலியோ.
- அவர் ஒரு இயற்கையான இயற்பியல் தத்துவவாதியாகவும், வானியலாளராகவும், கணிதவியலாளராகவும் இருந்தார்.
- வானியல் மற்றும் பொருட்களின் வலிமை மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை பங்களிப்புகளை செய்தார்.
வாழ்க்கை
- சிறுவயதில் இருந்து பொறியியல் துறையில் கவணம் செலுத்திய அவர் 1589 ஆம் ஆண்டில் பைஸா பல்கலைகழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
- பெளதீகத்துறையில் அவரின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு 1610 இல் Tuscany, Florence இல் முதன்மை கணிதவியலாளராக நியமனம் பெற்றார்.
சிறப்புகள்
- இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார்.
- கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”,“நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
- தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல்,சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.
- கலீலியோ பயனுறு அறிவியலிலும்தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
கலிலியோவின் தொலைநோக்கி
- 1609 – கலீலியோ சுமார் 24 மணி நேர விடா முயற்சியின் பின்னர் 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார்.
- அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலை நோக்கியை ( telescope) கண்டுபிடித்தார்!
கலிலியோவின் முக்கிய பிரசுரங்கள்
- ஸிடிரியஸ் நினியஸ் (விண்மீன் தூதர்). வெனிஸ் 1610. தொலைநோக்கியுடன் ‘புதிய உலகங்களின்’ கண்டுபிடிப்பு.
- உலகின் இரண்டு மிகப்பெரிய அமைப்புகள், டூல்மிக் மற்றும் கோபர்நிக்கன் பற்றிய உரையாடல். புளோரன்ஸ், 1632. பிரபலமான ‘இரு உலக அமைப்புகள் இடையே உரையாடல்’.
- கணிதம் மற்றும் ஆய்வாளர்கள், ஆழ்ந்த நியாயமான அறிவாளிகள். (இரண்டு புதிய அறிவியல்களைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கணித ஆர்ப்பாட்டங்கள்) லீடென் 1638.
இறப்பு
- 77 வயதில் ,8 ஜனவரி 1642 அன்று இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்