முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 21
யூ. ஆர். அனந்தமூர்த்தி பிறந்த தினம்
பிறப்பு:
- கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத் தில் தீர்த்தஹள்ளி அடுத்த மெலிகே கிராமத்தில் (21 டிசம்பர் 1932) பிறந்தார்.
சிறப்புகள்:
- உள்ளூர் சமஸ்கிருதப் பள்ளியில் ஆரம்பக் கல்வி யும், தீர்த்தஹள்ளியில் மேல்நிலைக் கல்வியும் பயின்றார்.
- கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியவர்.
- இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
- 2011-ல் இவரது ‘பாரதிபுரா’ படைப்பு ‘தி இந்து’ இலக்கியப் பரிசுக்காகவும், 2013-ல் இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.
மறைவு:
உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரும், கன்னட இலக்கிய உலகில் ‘நவ்ய’ எனப்பிடப்படும் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவருமான யு.ஆர்.அனந்தமூர்த்தி 2014, ஆகஸ்ட் மாதம் 82-வது வயதில் மறைந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்