கே. கே. பிர்லா நினைவு தினம்
- கிருஷ்ண குமார் பிர்லா அல்லது கே. கே. பிர்லா (Krishna Kumar Birla, அக்டோபர் 12, 1918 – ஆகஸ்ட் 30, 2008) என்பவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர்.
- 1991 இல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீரமைப்புக்கு ஆதரவளித்த தொழிலதிபர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
- இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் மற்றும் பல்வேறு பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராக திகழ்ந்தவர்.
- பிர்லா குழுமத்திற்கு நாடு முழுவதும் சர்க்கரை ஆலை, உர தொழிற்சாலை, இரசாயன, கனரக தொழிற்சாலை, புடவை, கப்பல்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளன.
- 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ராஜ்ய சபை உறுப்பினராக பதவி வகித்த பிர்லா, 1997 ம் ஆண்டு கல்கத்தா ஷெரீப் ஆகவும் பதவி வகித்தவராவார்.
- 1997 இல் இவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
அனைத்துலக காணாமற்போனோர் நாள்
- அனைத்துலக காணாமற்போனோர் நாள்( International Day of the Disappeared) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
- அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.
- “அனைத்துலக காணாமற்போனோர் நாள்” இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.