முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 26

0

அன்னை தெரேசா பிறந்த தினம் 

பிறப்பு:

  • அன்னை தெரேசா ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
  • இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.

தொண்டு:

  • 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
  • முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
  • இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும்.
  • அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.

புகழ்:

  • 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.
  • இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவிருதினையும் பெற்றார்.
  • இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

இறப்பு:

  • செப்டம்பர் 5, 1997ல் இறந்தார்.

திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த தினம்

பிறப்பு:
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.
பணிகள்:
  • 1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார்.
  • பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
  • இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார்.
  • நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
  • பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
  • அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
  • தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
  • சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
எழுதிய நூல்கள்:

வாழ்க்கை வரலாறுகள்:

  • யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் – 1908
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – 1927
  • நாயன்மார் வரலாறு – 1937
  • முடியா? காதலா? சீர்திருத்தமா? – 1938
  • உள்ளொளி – 1942
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
  • உரை நூல்கள்
  • பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
  • பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் – 1923
  • காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1941
  • திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
  • திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல் நூல்கள்:

  • தேசபக்தாமிர்தம் – 1919
  • என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
  • தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
  • தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
  • சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து – 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு காணொலி)
  • தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
  • தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
  • இந்தியாவும் விடுதலையும் – 1940
  • தமிழ்க்கலை – 1953

சமய நூல்கள்:

  • சைவசமய சாரம் – 1921
  • நாயன்மார் திறம் – 1922
  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
  • சைவத்தின் சமசரசம் – 1925
  • முருகன் அல்லது அழகு – 1925
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும் – 1928
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் – 1929
  • தமிழ் நூல்களில் பௌத்தம் – 1929
  • சைவத் திறவு – 1929
  • நினைப்பவர் மனம் – 1930
  • இமயமலை (அல்லது) தியானம் – 1931
  • சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
  • சமரச தீபம் – 1934
  • சித்தமார்கக்ம – 1935
  • ஆலமும் அமுதமும் – 1944
  • பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி – 1949

பாடல்கள்:

  • முருகன் அருள் வேட்டல் – 1932
  • திருமால் அருள் வேட்டல் – 1938
  • பொதுமை வேட்டல் – 1942
  • கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
  • புதுமை வேட்டல் – 1945
  • சிவனருள் வேட்டல் – 1947
  • கிறிஸ்து மொழிக்குறள் – 1948
  • இருளில் ஒளி – 1950
  • இருமையும் ஒருமையும் – 1950
  • அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி – 1951
  • பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – 1951
  • சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் – 1951
  • முதுமை உளறல் – 1951
  • வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் – 1953
  • இன்பவாழ்வு – 1925

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!