அன்னை தெரேசா பிறந்த தினம்
பிறப்பு:
- அன்னை தெரேசா ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
- இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
தொண்டு:
- 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
- முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
- இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும்.
- அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.
புகழ்:
- 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.
- இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவிருதினையும் பெற்றார்.
- இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.
இறப்பு:
- செப்டம்பர் 5, 1997ல் இறந்தார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த தினம்
பிறப்பு:
- செங்கல்பட்டு மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.
பணிகள்:
- 1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார்.
- பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
- இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார்.
- நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
- பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
- அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
- தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
- சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
எழுதிய நூல்கள்:
வாழ்க்கை வரலாறுகள்:
- யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் – 1908
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – 1927
- நாயன்மார் வரலாறு – 1937
- முடியா? காதலா? சீர்திருத்தமா? – 1938
- உள்ளொளி – 1942
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
- உரை நூல்கள்
- பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
- பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் – 1923
- காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1941
- திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
- திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்:
- தேசபக்தாமிர்தம் – 1919
- என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
- தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
- தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
- சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து – 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு காணொலி)
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
- இந்தியாவும் விடுதலையும் – 1940
- தமிழ்க்கலை – 1953
சமய நூல்கள்:
- சைவசமய சாரம் – 1921
- நாயன்மார் திறம் – 1922
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
- சைவத்தின் சமசரசம் – 1925
- முருகன் அல்லது அழகு – 1925
- கடவுட் காட்சியும் தாயுமானவரும் – 1928
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் – 1929
- தமிழ் நூல்களில் பௌத்தம் – 1929
- சைவத் திறவு – 1929
- நினைப்பவர் மனம் – 1930
- இமயமலை (அல்லது) தியானம் – 1931
- சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
- சமரச தீபம் – 1934
- சித்தமார்கக்ம – 1935
- ஆலமும் அமுதமும் – 1944
- பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி – 1949
பாடல்கள்:
- முருகன் அருள் வேட்டல் – 1932
- திருமால் அருள் வேட்டல் – 1938
- பொதுமை வேட்டல் – 1942
- கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
- புதுமை வேட்டல் – 1945
- சிவனருள் வேட்டல் – 1947
- கிறிஸ்து மொழிக்குறள் – 1948
- இருளில் ஒளி – 1950
- இருமையும் ஒருமையும் – 1950
- அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி – 1951
- பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – 1951
- சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் – 1951
- முதுமை உளறல் – 1951
- வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் – 1953
- இன்பவாழ்வு – 1925
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்