முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 10

0

வி. வி. கிரி பிறந்த தினம்

பிறப்பு:

  • 10 ஆகஸ்ட் 1894ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.
  • இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.
  • 1937ம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.
  • 1942ம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்கதுக்கே திரும்பினார். ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.
  • இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
  • 1952ம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
  • 1954ம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.
  • உத்தர பிரதேசம்(1957-1960),கேரளா(1960-1965) மற்றும் மைசூர்(1965-1967) மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.
  • 1967ம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் பதவிக் கால மரணத்தினால் 1969ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.
  • இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னாவை 1975ம் ஆண்டு பெற்றார் கிரி.
  • கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.
  • இவர் “தொழில் நிறுவனங்களின் உறவுகள்” மற்றும் “இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

இறப்பு:

  • 23 ஜூன் 1980ல் இறந்தார்.

சா. விசுவநாதன்பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆகஸ்ட் 10,1916ல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார்.

சிறப்பு:

  • சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர்.
  • தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர்.
  • கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
  • சாவியின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.
  • ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார்.
  • கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு ஞானபாரதி விருதும் பொற்கிழியும் அளித்துக் கௌரவித்து வந்தார்.

நூல்கள்:

  • திருக்குறள் கதைகள்
  • பழைய கணக்கு
  • வேதவித்து
  • கோமகனின் காதல்
  • உலகம் சுற்றிய மூவர்
  • நான் கண்ட நாலு நாடுகள்

நடத்திய இதழ்கள்:

  • வெள்ளிமணி
  • சாவி
  • பூவாளி
  • திசைகள்
  • மோனா

இறப்பு:

  • பிப்ரவரி 9, 2001ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
  • 1948 – ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
  • 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!