முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-8

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-8

மங்கள் பாண்டே நினைவு தினம் 

பிறப்பு:

  •  ஜூலை 19,1827ல் பிறந்தார்.
By IndianCow at English Wikipedia [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • மங்கள் பாண்டே என்பவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர்.
  • இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில்  ஒருவர்.
  • கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
  • உத்தரப் பிரதேசத்திலுள்ள நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்.
  • 1849ல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.
  • இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984ல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது.

இறப்பு:

  • ஏப்ரல் 8, 1857ல் இறந்தார்(29 வயது).

பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம் 

பிறப்பு:

  •  ஜூன் 27, 1838ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு வங்காள எழுத்தாளர்,கவிஞர்,இதழியலாளர் ஆவார்.
  • இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது.
  • இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார்.
  • இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
  • பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும்.
  • லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.
By Romesh Chunder Dutt [Public domain], via Wikimedia Commons

நூல்கள்:

  • இவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865ம் வருடம் வெளியானது.
  • கபால குந்தளம்(1866)
  • மிர்ணாளினி
  • தேவி சௌதாரிணி
  • ஆனந்த மடம்
  • அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு:

  • ஏப்ரல் 8, 1894ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!