முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் -ஏப்ரல் 6
பிறப்பு:
- மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.
சிறப்பு:
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துஇ பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார்.
- பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.
- இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார்.
- இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்இ குலாம் காதர்இ நாவலர்இ சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
- மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார்.
- திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
- பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர்.
இறப்பு:
- மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.
சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்
- விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சிஅமைதி சமாதானம் ஒற்றுமை ஒத்துழைப்பு புரிதல் ஆகியவற்றை கொண்டு உள்ளது.நாடு சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.
சிறப்பு:
- தனிப்பட்ட வளர்ச்சி.
- பொருளாதார வளர்ச்சி.
- சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு.
- தொடர்பு மற்றும் சமூக அணிதிரட்டல்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |