முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-30
சர்வதேச ஜாஸ் தினம்
- ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
- ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது.
- கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது.
- ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது.
- இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.
ஹிட்லர் நினைவு தினம்
பிறப்பு:
- ஏப்ரல் 20, 1889 ல் பிறந்தார்.
சிறப்பு:
- ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
- பின்பு 1934 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை ஜெர்மனி நாட்டின் தலைவராக இருந்தார்.
- ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.
- இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
- யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார்.
- போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார்.
- மெயின் கேம்ப் என்ற புத்தகத்தை எழுதினார்.
- இவர் மிக சிறந்த ஓவியர்.
- முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார்.
இறப்பு:
- 30-ஏப்ரல் 1945ல் இறந்தார்.
தாதாசாகெப் பால்கே பிறந்த தினம்
பிறப்பு:
- தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஏப்ரல் 30, 1870 ல் பிறந்தார்.
சிறப்பு:
- அவர் ஒரு இந்திய தயாரிப்பாளர்-இயக்குனர்-திரைக்கதை ஆசிரியர்.
- இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
- தாதா சாகெப் பால்கே இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
- துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஒரு மராத்தி மொழி பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு திறமையான அறிஞர்.
- 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
- பால்கே ,பரோடா மஹாராஜா சஜஜிரா பல்கலைக்கழகத்தில் – சிற்பம், பொறியியல், ஓவியம், மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைப் படித்தார்.
வாழ்க்கை:
- பால்கே, 19 ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் 95 திரைப்படங்களையும், 26 குறும்படங்களையும் தயாரித்தார்.
- அவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகள்:
- மோகினி பஸ்மசூர் (1913)
- சத்யவான் சாவித்ரி (1914)
- லங்கா தஹான் (1917)
- ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா (1918)
- காலியா மார்டன் (1919).
தாதாசாகெப் பால்கே விருது:
- சினிமா வாழ்நாள் பங்களிப்புக்காக தாதாசாஹேப் பால்கே விருது, 1969 ஆம் ஆண்டு அவரை கௌரவிக்க இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
- இந்திய சினிமாவில் மிகுந்த மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
- நாட்டில் திரைப்படத்துறையினருக்கு மிக உயர்ந்த உத்தியோகபூர்வ அங்கீகாரம் இது.
- 1971ம் ஆண்டில் இந்திய போஸ்ட்டில் அவரது சாயல் கொண்ட ஒரு தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
- தாதாசாஹேப் பால்கே அகாடமி மும்பையின் கௌரவ விருது 2001ம் ஆண்டில் இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இறப்பு:
- பிப்ரவரி 16, 1944ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்