முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 25
உலக மலேரியா தினம்
- ஏப்ரல் 25ம் தேதியான இன்று உலக மலேரியான தினமாக, அனுசரிக்கப்படுகிறது.
- மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
- ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.
- மலேரியா என்பது பிளாஸ்மோடியம் வகையைச் சேர்ந்த ஒட்டுண்ணி புரோட்டோஸோவான்ஸ் (ஒற்றை-உயிரணு நுண்ணுயிரிகளின் ஒரு குழு) காரணமாக மனிதர்களையும் பிற விலங்குகளையும் பாதிக்கும் ஒரு கொசு-தொற்று நோய் தொற்று ஆகும்.
- அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.
- 1880 ஆம் ஆண்டில் சார்லஸ் லாவ்ரன் முதன் முதலாக இரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணிகள் இருப்பதை காட்சியாகக் காண்பித்தார்.
புதுமைப்பித்தன் பிறந்த தினம்
பிறப்பு:
- ஏப்ரல் 25, 1906 ல் பிறந்தார்.
இயற்பெயர்: சொ. விருத்தாசலம்.
சிறப்பு:
- மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
- 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
- இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது.
- 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின.
- மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார்
புனைப்பெயர்கள்:
- சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு.
புதுமைப்பித்தனின் படைப்புகள்:
- இணையற்ற இந்தியா
- அதிகாரம் யாருக்கு
- செல்லம்மாள்
- கடவுளின் பிரதிநிதி
- வழி
- இரண்டு உலகங்கள்
- பயம்
- அம்மா
- கனவு
இறப்பு:
- ஜூன் 30, 1948 ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்