முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 19
சார்லஸ் ராபர்ட் டார்வின் நினைவு தினம்
பிறப்பு:
- பிப்ரவரி 12, 1809 ல் பிறந்தார்.
சிறப்பு:
- ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
- இவர் பரிணாமவியலின் தந்தை ஆவர்.
- மனிதன் குரங்கின் பரிணாம வளர்ச்சி என்று விளக்கியவர்.
- மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார்.
டார்வின் எழுதிய புத்தகங்கள்:
- ‘பீகிள் கடற்பயணம்’ என்னும் புத்தகம் எழுதினார்.
- தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
- தன் கண்டுபிடிப்புகளை ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.
- டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும்.
இறப்பு:
- சார்லஸ் டார்வின் 1882-ஏப்ரல் 19ல் காலமானார்.
பியரி கியூரி நினைவு தினம்
பிறப்பு:
- 15 மே 1859 ல் பிறந்தார்.
சிறப்பு:
- பிரெஞ்சு இயற்பியலாளர்.
- அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர்.
- கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும்.
விருது:
- 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர்.
- 1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய ஆய்வுக்காக தாவி விருது வழங்கப்பட்டது.
கண்டுபிடிப்புகள்:
- காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக ‘முறுக்குத் தராசு’ (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார்.
- பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.
- ‘படிக மின் அழுத்தமானியை உருவாக்கினார்.
- காந்தப் புலங்களைப் பயன்படுத்தி வெளியேறிய துகள்களான ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்களை கண்டறிந்தார்.
இறப்பு:
- 19 ஏப்ரல் 1906 ல் காலமானார்.
முதல் செயற்கைக் கோள்: ஆர்யபட்டா
-
1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, தனது முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை ரஷ்ய நாட்டிலிருந்து விண்ணிற்கு செலுத்தியது.
-
அதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டது.
- ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.இதன் எடை 360கிகி ஆகும். பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.
-
செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |