முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
- பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்(1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.
- “இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்” (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நோக்கம்
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
- புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
- குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்
வ. வே. சுப்பிரமணியம்
- வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர்) ஏப்ரல் 2 1881 அன்று பிறந்தவர்.
- இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
- இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.
சிறப்பு
- தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
நினைவு இல்லம்
- தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம்எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
இறப்பு
- வ. வே. சு. ஐயர் சூன் 4, 1925 அன்று இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |