முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

  • பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்(1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.
  • “இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்” (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நோக்கம்

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

  • புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
  • குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

வ. வே. சுப்பிரமணியம்

  • வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர்) ஏப்ரல் 2 1881  அன்று பிறந்தவர்.
  • இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
  • இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

சிறப்பு

  • தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

நினைவு இல்லம்

  • தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம்எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.

இறப்பு

  • வ. வே. சு. ஐயர் சூன் 4, 1925 அன்று இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!