TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு – சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு!
ஒருங்கிணைந்த சார்நிலை இன்ஜினீரிங் பணியிடங்கள், மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரையாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் அனைத்தும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2A, குரூப் 4 முதலான தகுதித் தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மேலும், கடந்த மே 21 ஆம் தேதி தான் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது மற்றும் ஜூலை 24 ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலை இன்ஜினீரிங் பணியிடங்களுக்கான தேர்வையும் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த சார்நிலை இன்ஜினீரிங் பணியிடங்கள், மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரையாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
ரயில் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல்நிலை சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று ( ஜூலை 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.