முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே5மற்றும்6

0

மே 5மற்றும்6 2018 ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்

  • சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைரவிழா மற்றும் 160- வது பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களையும், 9 பேருக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.
  • இந்தியாவின் மேற்கு ரெயில்வே பெண்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவையை 1992-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 26 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
  • ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பருவநிலைக்கேற்ப நடைபெறும் தர்பார் மாற்றத்தின்படி அம்மாநிலத்தின் தலைமை செயலகம் 05.2018 முதல் ஸ்ரீநகரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையில் கொண்டப்படும் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
  • அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.
  • துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா, பெரு நாடுகளுக்கு வெங்கையா நாயுடு 05.2018ல் புறப்பட்டு சென்றார்.
  • லண்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை 5 ஆண்டுகளுக்கு பின் ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
  • சீனாவை சேர்ந்த பிரபல ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம், ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
  • தென் கொரியாவுடன் நல்லுறவை தொடங்கியுள்ள வட கொரியா தனது நேரத்தை, அந்நாட்டிற்கு இணையாக அரைமணிநேரம் முன்னோக்கிச் சென்றுள்ளது.
  • ஜப்பானிலும் ஆண்டுதோறும் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பயோ எத்தனால் வாகனங்களை தயாரிக்க பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்களுக்கு அனுமதி.
  • உலகில்  மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
  • பிளிப்கார்ட்டின் 75% பங்குகள் வால்மார்ட்டுக்கு விற்பனை.
  • வளிமண்டலத்தில் உள்ள காற்றில் மாசு அளவு மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கண்டறிய திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து மே 6 2018 விண்ணில் ஏவப்படுகிறது.
  • இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்கி 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ரூர்கே ..டி. ஆய்வாளர்கள் என்எஸ்பி-2 புரோட்டீஸ் என்ற என்சைமில் இருந்து பெப்-1, பெப்-2 ஆகிய மூலக்கூறுகளை எடுத்து அதன் மூலம் சிக்குன்குனியா வைரஸ்களை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
  • செவ்வாய் கிரகத்தின் பூகம்பங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அடுத்த மைல்கல் விண்கலம் இன்சைட் என்பதை அனுப்பியுள்ளது.
  • ஐரோப்பாவில் நடந்த உலக அளவிலான செஸ் போட்டியில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 1-ம் வகுப்பு மாணவி லக்‌ஷனா(வயது 6) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
  • ஆசிய வலுதூக்குதல் போட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 84 கிலோ எடை பிரிவில் சென்னை மாணவி ரம்யா தங்கப்பதக்கம் வென்றார்.
  • தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 06.05.2018ல் கொழும்பில் தொடங்கியது.
  • 05.05.2018ல் நடைபெற்ற ப்ராஹ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை வீழ்த்தினார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!