முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 05, 2018
- கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தின் முத்லாயூர் கிராமம் முதல் காம்பளி வரை துங்கபத்ரா நதி வழிப்பாதையை 34km தூரத்திற்கு, கர்நாடகாவின் முதல் நீர்நாய் பாதுகாப்பு காப்பகம் (Tungabhadra Otter Conservation Reserve) அமைந்துள்ளது.
- மாநில அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு ஏதுவாக தெலுங்கான மாநில அரசு T app என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- நாடுகளுக்கு இடையில் நடை பெறும் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி, 2019 முதல் உலக கேர்பபை டென்னிஸ் போட்டி என பொய் மாற்றம் செய்யப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. 1900 ல் டேவிஸ் கோப்பை ஆரம்பிக்கப்பட்டது.
- இந்திய பழங்குடி கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பு (TRIFED) சார்பில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஆடி மகோத்சவம் (Aadi Mahotsav) என்ற பழங்குடியினர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. Theme : A celebration of the spirit of Tribal Craft, Culture, Culisne, and Commerce.
- குறுஞ்செய்தி (SMS) மற்றும் CALL பேச மட்டுமே பயன்படும் செல்போனை கண்டறிந்த ஹாலியர் ரூ டாங் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
- GOES – S என்ற செயற்கைக் கோளை அட்லஸ் 5 (ATLAS 5) ராக்கெட் மூலம் கேப்கேனவரலில் இருந்து USA ஏவியது. இது வானிலை நிலவரங்களை துல்லியமாக முன் கூட்டியே கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநில அரசின் ஷிவ் சக்தி விளையாட்டு விருதுகள் 2015 – 16 க்கு அஜாங்யே ரஹானே மற்றும் 2016 – 17 ற்கு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- உலகின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்காக 20 இந்திய பல்கலைக் கழகங்களை தெரிவு செய்யும் குழுவினை, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உருவாக்கியுள்ளது. இதன் தலைவராக N. கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேசிய பாதுகாப்பு தினம் (National Safty Day) March 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இத்தாலியின் தொழில் முறை கால்பந்து வீரர் டேவிட் அஸ்டோரி 31 வயதில் காலமானார்.
- திரிபுராவின் புதிய முதல்வராக பிப்லப் டிப் நியமிக்கப்பட்டுள்ளார்.