முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24 2018
- மத்தியப் பிரதேசத்தில் கிராமப்புறச் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 21 டாலர் கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டன.
- இரண்டாவது முறையாக வங்காள தேசத்தின் அதிபராக பதவியேற்றார் அப்துல் ஹமீத்.
- இந்திய விமானப்படை தனது அகில இந்திய அளவிலான ககன் சக்தி 2018 என்ற போர்ப் பயிற்சியை 2018 ஏப்ரல் 8-ந் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்தியது.
- மேகாலயா மாநிலத்திலிருந்து ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை (ஏஎப்எஸ்பிஏ) வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள 160 வருட பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில்பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார்.
- சர்வதேச பெண் தலைமையாளர் விருது வங்காள தேசத்தின் ஷேக் ஹசினாவுக்கு 27ம் தேதிநடைபெறும் சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டின்போது அவருக்கு வழங்கப்படுகிறது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்முறையாக இந்தியா பங்கேற்கிறது.
- டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்) நாட்டின் முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்ற பெருமையை எட்டியுள்ளது.
- வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவதில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா – உலக வங்கி அறிக்கை.
- தென்கொரியாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பைப் போட்டிகளில் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஷாஸார் ரிஸ்வி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 7-வது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்மகளிர் அணி.